More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் 52 நாட்களில், மாஸ்க் அணியாத 12 லட்சம் பேர் சிக்கினர்!
தமிழகத்தில் 52 நாட்களில், மாஸ்க் அணியாத 12 லட்சம் பேர் சிக்கினர்!
Jun 02
தமிழகத்தில் 52 நாட்களில், மாஸ்க் அணியாத 12 லட்சம் பேர் சிக்கினர்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதியில் இருந்து போலீசார் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.



கடந்த 52 நாட்களில் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றிய 12 லட்சத்து 9 ஆயிரத்து 584 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



இதில் அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 282 பேர் சிக்கி உள்ளனர். வடக்கு மண்டலத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 77 பேருக்கும், மேற்கு மண்டலத்தில் 2 லட்சத்து 1,633 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



மத்திய மண்டலத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 530 பேர் சிக்கியுள்ளனர்.



சென்னைக்கு வெளியே உள்ள நகரப்பகுதிகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 52 நாட்களில் நகர்புறங்களில் முக கவசம் அணியாமல் சுற்றிய 2 லட்சத்து 44 ஆயிரத்து 362 பேர் பிடிபட்டுள்ளனர்.



நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 749 பேர் தமிழகம் முழுவதும் சிக்கி இருக்கிறார்கள்.



இதே போன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத குற்றத்துக்காக 60 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. நேற்று ஒரே நாளில் 1,296 வழக்குகளும், நேற்று முன்தினம் 1,552 வழக்குகளும் போடப்பட்டுள்ளன.



சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடர்பாக தெற்கு மண்டலத்தில்தான் அதிக வழக்குகள் போடப்பட்டுள்ளது. அங்கு 14,838 வழக்குகள் பதிவாகி உள்ளன.



சென்னையிலும் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 5,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,596 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.



முக கவசம் அணியாமல் சுற்றிய 3 ஆயிரம் பேர் பிடிபட்டுள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத 247 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்

Jan02

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச

Feb23

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை 

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்

Jul03

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி

Aug06

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Jul07

இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனி

Jan31

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுத

Aug13

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்

Feb05

விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம

Jun26

பள்ளி கல்வி

Feb23

ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந

Aug24

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந

Apr01

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய

Sep24

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன