More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அம்பாறை திருக்கோவிலில் சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது!
அம்பாறை திருக்கோவிலில் சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது!
Jun 16
அம்பாறை திருக்கோவிலில் சுகாதார விதி முறைகளை மீறிய 08 பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறிய 08 நபர்கள் திருக்கோவில் காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய சுற்றிவளைப்பு ஒன்றினை இராணுவ மோட்டார் படையணியின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து இருந்தனர்.



இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் பிரதான வீதிகள் மற்றும் உள் வீதிகளில் அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காது வீதிகளில் சுற்றித்திரிந்த நபர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.



இதேவேளை விநாயகபுரம் கடற்கரை வீதியில் காட்ஸ் விளையாடிக் கொண்டு இருந்த கும்பல் ஒன்றினையும் இராணுவ மோட்டார் சைக்கில் படையணியின் உதவியுடன் திருக்கோவில் காவற்துறையினர் கைது செய்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



இவ் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்குபடுத்தலில் கீழ் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் திருக்கோவில்காவல் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.திலகரெத்தின இராணுவத்தின் மோட்டார் சைக்கில் படையணியினர் திருக்கோவில் பிரதேச கொவிட் தடுப்பு செயலணியின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ் திடிர் சுற்றிவளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar18

அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ

May13

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ

Apr16

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக

Jan20

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Oct03

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்

Mar27


நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ

Oct04

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி

Mar12

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம

Aug08

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா

Apr02

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச

Feb23

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத

Jan14

சந்தையில் தேங்காயின் விலையும்  10 முதல் 15 ரூபாவினால் அ

Aug22

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய

Mar25

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும