More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காணாமல் போனோருக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை – கஜேந்திரகுமார்
காணாமல் போனோருக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை – கஜேந்திரகுமார்
Jul 07
காணாமல் போனோருக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை – கஜேந்திரகுமார்

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.



இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்ய எடுக்கும் முயற்சியை நான் வரவேற்கின்றேன்.



அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயத்தை பொறுத்தவரை இந்தப் பிரேரணை வந்தபோது தற்போதைய அரசு மிக மோசமாக விமர்சித்தது.



இந்தப் பிரேரணையை அரசு நிராகரிப்பதாக கூறினர். முன்னைய அரசும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விடுபட இதனைப் பயன்படுத்திக்கொண்டனர்.



காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலையம் மிகவும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் இருந்து இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இறுதியாக அவர்கள் வாக்குமூலம் கொடுப்பதை நிராகரிக்கும் நிலைமை உருவாகியது.



அதேபோல், இராணுவத்தைத் தண்டிக்க இடமளிக்கமாட்டோம் என சிங்கள அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்தால் எவ்வாறு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும்?



தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை” – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப

Oct26

நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை

Jan30

அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர

Mar12

எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம், 

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Sep19

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர

Jul26

வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க

Jan15

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள

Feb22

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல

Sep06

 இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

Apr23

நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ

Jul25

கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்

Feb03

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்

Feb02

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்