More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஹைதி அதிபர் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் கைது!
ஹைதி அதிபர் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் கைது!
Jul 13
ஹைதி அதிபர் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் கைது!

கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி. அந்த நாட்டின் அதிபராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ஜோவனல் மோயிஸ்.



53 வயதான இவர் கடந்த 7-ந்தேதி தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் அதிபர் ஜோவனல் மோயிஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.



மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் அதிபர் ஜோவனல் மோயிஸ் மனைவி மார்ட்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.



இதனிடையே அதிபர் ஜோவனல் மோயிசை படுகொலை செய்தது 28 பேரை கொண்ட வெளிநாட்டு கூலிப்படை என்பதை ஹைதி போலீசார் கண்டுபிடித்தனர்.



மேலும் அவர்களில் 26 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் ஹைதி அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது.



அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய நடந்த அதிரடி தேடுதல் வேட்டையின் போது கூலிபடையை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 17 பேரை போலீசார் கைது செய்தனர். அதேவேளையில் கூலிப்படையை சேர்ந்த 8 பேர் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பி சென்றனர்.



நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



இந்த நிலையில் அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஹைதி போலீஸ் தலைமை அதிகாரி லியோன் சர்லஸ் கூறியதாவது:-



அதிபர் ஜோவனல் மோயிஸ் கொலையில் தொடர்புடைய முக்கிய நபராக அறியப்படும் 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் கைது செய்யப்பட்டுள்ளார்.



இவர் ஹைதியில் பிறந்து அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் குடியேறியவர் ஆவார். டாக்டரான இவர் அரசியல் நோக்கங்களுடன் தனி விமானம் மூலம் ஹைதி வந்துள்ளார். அதிபர் ஜோவனல் மோயிசை கைது செய்வதே தங்களின் முதல் திட்டமாக இருந்ததாகவும், பின்னர் அது மாறியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும் இது பற்றிய விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



இவ்வாறு போலீஸ் அதிகாரி லியோன் சர்லஸ் கூறினார்.



இதனிடையே ஹைதியின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் நேற்று முன்தினம் ஹைதி சென்றனர். இவர்கள் ஹைதியின் ஆட்சித் தலைவர் என தங்களை கூறி வரும் 3 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.



முன்னதாக அதிபரின் படுகொலையை தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க படையை அனுப்பி உதவுமாறு அமெரிக்காவிடம் ஹைதி அரசு கோரிக்கை வைத்ததும், அதனை அமெரிக்க அரசு நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி

Mar27

 உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு

Jan25

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Nov08

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5

Feb23

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர

Jul25

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்

Oct24

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந

Oct18

பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி

Mar07

ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா

Sep19

ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந

Jul08

போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்

Mar06

பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை

Apr21

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற

Mar27

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ்

Mar03

இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்