More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!
மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!
Jul 13
மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் சில தனியார் பள்ளிக்கூடங்கள் இணையவழியில் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கின்றன. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.



எனினும் போதிய வசதி இல்லாத குழந்தைகள், தொலைக்காட்சி மூலம் கல்வி பயில இயலாத நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நேரடியாக பயின்றால்தான் பாடங்களை நன்கு கற்பதற்கு முடிகிறது.



இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி, அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் தங்களது பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாடங்களை பயிற்றுவிக்கின்றனர்.



அதன்படி நேற்று மூலைக்கரைப்பட்டி மறவன்குளத்துக்கு சென்ற ஆசிரியர்கள், அங்குள்ள மரத்தடியில் மாணவர்களை முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமரச்செய்து பாடங்களை பயிற்றுவித்தனர். கல்வி தொலைக்காட்சியில் வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பு செய்வதை மாணவர்கள் தவறாது பார்த்து பயில வேண்டும் என்றும் விளக்கி கூறினர். மாணவர்கள் கல்வி பயில விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்களை தலைமை ஆசிரியை அகஸ்டினா பாராட்டினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்

Jan27

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த

Apr19

 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த

Apr19

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப

Mar21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய

Sep16

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்

Oct17

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக

Apr22

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க

Feb19

திமுக  இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு

Feb23

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று

Sep18

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற

Feb06

இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்

Jun12

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச

Mar09

இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந

Sep23

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல