More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது – சித்தார்த்தன்
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது – சித்தார்த்தன்
Jul 17
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது – சித்தார்த்தன்

ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த காரணத்தினாலேயே அவை பிரிவை நோக்கி செல்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.



வவுனியாவில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,



கூட்டமைப்பானது பலம் வாய்ந்த அமைப்பாக இருந்த நிலையில் தற்போது பலவீனமடைந்து வரும் நிலையை பார்க்கிறோம். அது பலவீனமடைகின்றபோது தமிழினமும் பலவீனமடைகின்றது. வடகிழக்கில் அரசுக்கு சார்பான 6 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர். இது ஒரு பின்னடைவை கொடுக்கக்கூடிய விடயமே. எனவே மக்கள் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையான முயற்சியை அவர்கள் ஆதரிக்க வேண்டும். கட்சிகளும் மற்றையவர்களை அரவணைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.



சில தவறுகள் காரணமாகவே கூட்டமைப்பில் இருந்து பலர் பிரிந்து சென்றனர். அவர்களை மீளவும் உள்வாங்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகளை தொடர்ந்து நாம் எடுக்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் எமக்குத்தான் அதிகம் தெரியும் என்றவாறான அபிப்பிராயங்களை ஊடகங்கள் மூலமாக கூறி குழப்பங்களை தொடர்ந்து வைத்திருக்கிறோம். இது ராஜபக்ச அரசுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றது.



இதேவேளை 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஆயினும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு அதனை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எமக்கு தெரிவிக்கின்றனர். ஒற்றுமையாக ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என்றில்லாமல், அடிப்படையிலே தமிழ்மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து சரியான நிலைப்பாட்டை நகர்த்துவதன் மூலம் தான் எமது மக்கள் தலைநிமிர்ந்து நிற்கும் நிலையை உருவாக்க முடியும்.



அதற்கு முயற்சிப்பதுடன் அதனை அடைவதன் மூலம்தான் இன்னுயிரை கொடுத்தவர்களின் ஆத்மாசாந்தியடையும். அதுவே இந்த நினைவுதினங்களை வைப்பதில் அர்த்தமுடையதாக இருக்கும் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun15

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செய

Mar26

வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக

May10

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க

Oct10

இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ

Sep20

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட

Apr30

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள

Jan27

இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூப

Apr09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த

Oct06

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்

Oct25

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற

Mar24

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி

Jan24

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக

Sep24

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்ன

Jul07

காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத

Mar28

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு