More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகம் முழுவதும் உள்ள 539 கோவில்களில் தூய்மை பணிகள்!
தமிழகம் முழுவதும் உள்ள 539 கோவில்களில் தூய்மை பணிகள்!
Aug 03
தமிழகம் முழுவதும் உள்ள 539 கோவில்களில் தூய்மை பணிகள்!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப் பணிகள் (தூய்மை பணிகள்) செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வ குழுக்கள் மூலமாக பணிகள் நடந்து வந்தன.



இதனை எளிமைப்படுத்தும் வகையில் www.hrce.tn.gov.in என்ற இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதியை அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இதன் மூலம் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்து வந்தனர்.



இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஆடி கிருத்திகை, ஆடிபெருக்கு விழாக்களை முன்னிட்டு கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழாக்கள் நடத்தவும், சாமி தரிசனம் செய்யவும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.



இந்த நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.



இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-



இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 539 கோவில்களில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.



ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்பட 539 கோவில்களில் உள்ள பிரகாரம், நந்தவனம், தெப்பக்குளம், தண்ணீர் தொட்டி, மதில் சுவர்கள், விமானங்களில் உள்ள செடிகள் அகற்றும் பணிகள், தரைத்தளம், மண்டபம், தூண்களை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்

Mar09

இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Jul20

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n

Jun30

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் 

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை

Apr15

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர

Jan17

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை

Jun28

காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்

Jan18

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க

Oct07

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத

Aug11

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு

Jan25

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய

Oct17

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம்  சித்தூர் ஆகிய ஊர்

Mar29

புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக