நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜுக்கு, கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றார். தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று விட்டது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். மேலும், மருத்துவருக்கும், தான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியிருக்கிறார்.
