More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • நடுவானில் வங்காளதேச விமானிக்கு மாரடைப்பு!
நடுவானில் வங்காளதேச விமானிக்கு மாரடைப்பு!
Aug 28
நடுவானில் வங்காளதேச விமானிக்கு மாரடைப்பு!

வங்காளதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. விமானம் இந்திய எல்லைக்குள், ராய்ப்பூர் அருகே வந்த போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி, மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் இருப்பதால் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.



அதோடு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டுத்தளத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்காளதேச விமானியும் இது தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விமானம் எந்தவித பிரச்சினையும் இன்றி பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.



உடனே விமானத்தில் இருந்த விமானி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தக்க நேரத்தில் துணை விமானி விமானத்தை நாக்பூரில் தரையிறக்கியதால் 126 பயணிகள் உயிர் தப்பினர். விமானிக்கு தற்போது நாக்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



நாக்ப்பூருக்கு வந்த விமான நிர்வாகத்தின் மாற்று குழுவினர், பயணிகளை வங்காளதேசம் அழைத்துச் சென்றனர்.



கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட அந்த வங்காளதேச விமான நிறுவனம் இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தியிருந்தது. சமீபத்தில்தான் அந்நிறுவனம் தனது சேவையை இந்தியாவுக்கு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின்

Apr12

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப

Apr14

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ

Aug22

காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள

Mar01

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்

Jun16

நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப

May29

கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அ

Feb04

தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக

May03

கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்தி

Apr09

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய

Mar26

கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத

May31

ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப

Apr22

ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற

May18

நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று

May10

தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன